Songtexte.com Drucklogo

Oru Tharam Ore Tharam Songtext
von M. S. Viswanathan

Oru Tharam Ore Tharam Songtext

ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாபம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்

ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்

இருவருக்கும் முதல் மயக்கம்
இடம் கொடுத்தால்
அது எது வரைக்கும்
பெண்மை என்றால் கண்மறைவாய்

மூடிவைத்தால் சுவை இருக்கும்
இருவருக்கும் முதல் மயக்கம்
இடம் கொடுத்தால்
அது எது வரைக்கும்
உள்ளதெல்லாம் அள்ளித் தந்தால்
காலமெல்லாம் சுவை இருக்கும்


ஒரு தரம் ஒரே தரம்
உறவு தேடும் கண்கள் பாவம்
தனிமையில் உருகிடும்
பார்வையில் என்னென்ன பாவம்

வண்ணச் சிலை எதிர் வந்தாளோ
கண்ணுக்கொரு பதில் தந்தாளோ
தொட்டுக்கொள்ள தடை செய்வாளோ
தத்தித் தத்தி மெல்ல செல்வாளோ

தங்கவளை தளிர் கையோடு
வெள்ளித் திங்கள் இரு கண்ணோடு
முத்துப் பந்தல் அதை தன்னோடு
மன்னன் மட்டும் இவள் நெஞ்சோடு

சித்திரத்தின் முகம் கண்டேனே
செம்பவழம் நிறம் என்றேனே
உண்ண உண்ண இதழ் செந்தேனே
உன்னிடத்தில் என்னைத் தந்தேனே

இல்லை எனும் இடைத் தள்ளாட
மெல்ல மெல்ல உன்னை மன்றாட
சொல்லச் சொல்லத் தொட வந்தாயோ
என்ன என்ன சுகம் கண்டாயோ


ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்

ஒரு தரம்
ஒரே தரம்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von M. S. Viswanathan

Fans

»Oru Tharam Ore Tharam« gefällt bisher niemandem.