Songtexte.com Drucklogo

Sempoove Poove Songtext
von S. P. Balasubrahmanyam & K. S. Chithra

Sempoove Poove Songtext

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ

இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

அந்திச் சூரியனும் ஊரில் சாய மேகம் வந்து கச்சை ஆக
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்

தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு

நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டின் காதல் குற்றாலம்
தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான்

சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி

ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைவளை கீறியதோ


செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ

அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சில் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே

விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலா
பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ

முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
நாணத்தாலோராடை சூடிக்கொள்வேன் நானே

பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையலின் ரகசியமே
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ

ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von S. P. Balasubrahmanyam & K. S. Chithra

Fans

»Sempoove Poove« gefällt bisher niemandem.