Songtexte.com Drucklogo

Unkooda Thunaiyaga Songtext
von Kalyani Nair

Unkooda Thunaiyaga Songtext

உன் கூட துணையாக நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
உன் கூட ஒதுங்காம கால் நட போடுமே
உன்ன சேரவே படி தாண்டுமே

உன்ன நெருங்க இரவு பகல் அழகாகுமே
உயிர் உருக பழகி விடு அது போதுமே
ஒரு நாளுமே விலகாமலே உன்னோடு வாழ சேரும் எல்லாமே

உன் கூட துணையாக நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே


அவரை கொடியா உன்ன விடாம படர நெனப்பேன் மலை காட்டுல
கவலை துளியும் தொட விடாம உன்னையும் சுமப்பேன் உயிர் கூட்டுல
ஊரே சேந்து அடிச்சு தொவைச்சாலும்
உன்ன சேர பொழச்சு கெடப்பேனே
உன் கையில கை ரேகையா ஒளிஞ்சு இருப்பேனே உலகம் மறப்பேனே

உன் கூட துணையாக நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
உன் கூட...

பொழுது விடியும் வரை நிலாவா மிதந்து வருவேன் தல கோதிட
விடிஞ்ச பெறகும் பகல் கனாவா ஒதுங்க மரப்பேன் கத கேட்டிட
காலம் பூரா சலிச்சு எடுத்தாலும் யாரும் இல்ல உனக்கு இணையாக
என் கண்ணுல தங்காம நீ ஒதுங்க நினைக்காத உசுர உடைக்காத

உன் கூட துணையாக நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே

உன்ன நெருங்க இரவு பகல் அழகாகுமே
உயிர் உருக பழகி விடு அது போதுமே
ஒரு நாளுமே விலகாமலே உன்னோடு வாழ சேரும் எல்லாமே
உன் கூட...

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welche Band singt das Lied „Das Beste“?

Fans

»Unkooda Thunaiyaga« gefällt bisher niemandem.