Songtexte.com Drucklogo

Akkarai Seemai Songtext
von K. J. Yesudas

Akkarai Seemai Songtext

அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
புதுமையிலே மயங்குகிறேன்

அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே

பார்க்க பார்க்க ஆனந்தம்
பறவைப் போல உல்லாசம்
வேலையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்

வெறும் பேச்சு வெட்டி கூட்டம்
ஏதும் இல்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்

அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்


சிட்டுப் போல பிள்ளைகள்
தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளி துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம்

தினம் தோறும் திருநாளே
சுகம் கோடி மனம் போலே
சீனர் தமிழர் மலாய மக்கள்
உறவினர் போல அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்

அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே

மஞ்சள் மேனி பாவைகள்
தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை உம்மைப் பாராட்ட

நடை பார்த்து மயில் ஆடும்
மொழி கேட்டு கிளி பேசும்
கண்ணில் தவழும் புன்னகைக் கண்டேன்
சொர்க்கம் போல இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர்

அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welcher Song ist nicht von Robbie Williams?

Fans

»Akkarai Seemai« gefällt bisher niemandem.