Songtexte.com Drucklogo

Putham Puthu Kaalai Songtext
von Anitha

Putham Puthu Kaalai Songtext

புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

புத்தம் புது காலை
பொன்னிற வேளை

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ?


மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை
பொன்னிற வேளை

வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ?
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ?
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது, இசைபாடுது
வலி கூடிடும் சுவைகூடுது

புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
லல்லலாலா லா லாலா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Anitha

Fans

»Putham Puthu Kaalai« gefällt bisher niemandem.