Songtexte.com Drucklogo

Kadhal Siragai Songtext
von P. Susheela

Kadhal Siragai Songtext

காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா
கண்ணீர் கடலில் குளிக்கவா

எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா
இரு கை கொண்டு வணங்கவா

காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா
கண்ணீர் கடலில் குளிக்கவா


முதல் நாள் காணும் புதுமணபெண்போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா
பரம்பரை நாணம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் இருந்தால்
பேசமறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சந்நிதி
அதுதான் காதல் சந்நிதி

காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா
கண்ணீர் கடலில் குளிக்கவா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von P. Susheela

Quiz
Cro nimmt es meistens ...?

Fans

»Kadhal Siragai« gefällt bisher niemandem.