Songtexte.com Drucklogo

Anantham Anantham Songtext
von K. S. Chithra

Anantham Anantham Songtext

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

காற்றினில் சாரல் போலப் பாடுதே
பூக்களில் தென்றல் போலத் தேடுதே
நீ வரும் பாதையில்
கண்களால் தவம் இருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

உன்னைப் பார்த்த நாளில் தான்
கண்ணில் பார்வைத் தோன்றியது
உந்தன் பேரைச் சொல்லித் தான்
எந்தன் பாஷை தோன்றியது


உன்னை மூடி வைக்கத் தான்
கண்ணில் இமைகள் தோன்றியது
உன்னைச் சூடிப் பார்க்கத் தான்
பூக்கள் மாலை ஆகியது

நீ என்னைச் சேர்ந்திடும் வரையில்
இதயத்தில் சுவாசங்கள் இல்லை
நீ வந்து தங்கிய நெஞ்சில்
யாருக்கும் இடமே இல்லை

பார்த்து பார்த்து
ஏங்கிய சொந்தம்
வாசலில் வந்துச் சேர்ந்ததே

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

உன்னை நீங்கி எந்நாளும்
எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு
ஜென்மம் ஒன்றுப் போதாது

உன்னை எண்ணும் உள்ளத்தில்
வேறு எண்ணம் தோன்றாது
காற்று நின்றுப் போனாலும்
காதல் நின்றுப் போகாது


எங்கெங்கோ தேடிய வாழ்வை
உன் சொந்தம் தந்தது இங்கே
சந்தங்கள் தேடிய வார்த்தை
சங்கீதம் ஆனது இங்கே

ஆசைக் காதல்
கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

காற்றினில் சாரல் போலப் பாடுதே
பூக்களில் தென்றல் போலத் தேடுதே
நீ வரும் பாதையில்
கண்களால் தவம் இருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von K. S. Chithra

Fans

»Anantham Anantham« gefällt bisher niemandem.