Songtexte.com Drucklogo

Kanmoodi Thirakumbothu Songtext
von Devi Sri Prasad

Kanmoodi Thirakumbothu Songtext

கண்மூடி திறக்கும்
போது கடவுள் எதிரே வந்தது
போல அடடா என் கண்
முன்னாடி அவளே வந்து
நின்றாளே குடை இல்லா
நேரம் பாா்த்து கொட்டி போகும்
மழையை போல அழகாலே
என்னை நனைத்து இது தான்
காதல் என்றாலே

தெரு முனையை
தாண்டும் வரையில் வெறும்
நாள் தான் என்று இருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று
திருநாள் என்கின்றேன் அழகான
விபத்தில் இன்று ஹையோ நான்
மாட்டிக்கொண்டேன் தப்பிக்க
வழிகள் இருந்தும் வேண்டாம்
என்றேன் ஓஹோ ஹோ ஓஹோ
ஹோ ஓ ஓஹோ ஓஓ


(விசில்)

உன் பேரும்
தெரியாது உன் ஊரும்
தெரியாது அழகான
பறவைக்கு பேர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை
நிலா அறியுமா

உயிருக்குள் இன்னோர்
உயிரை சுமக்கின்றேன் காதல்
இதுவா இதயத்தில் மலையின்
எடையை உணர்கின்றேன் காதல்
இதுவா

கண்மூடி திறக்கும்
போது கடவுள் எதிரே வந்தது
போல அடடா என் கண்
முன்னாடி அவளே வந்து
நின்றாளே


வீதி உலா நீ
வந்தால் தெருவிளக்கும்
கண் அடிக்கும் வீடு செல்ல
சூரியனும் அடம்புடிக்குமே
நதியோடு நீ குளித்தால்
மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்க
தான் மழை குதிக்குமே

பூகம்பம் வந்தால்
கூட ஓஹோ ஹோ பதறாத
நெஞ்சம் எனது ஓஹோ ஹோ
பூ ஒன்று மோதியதாலே ஓஹோ
ஹோ பட் என்று சரிந்தது இன்று
ஓ ஓ

கண்மூடி திறக்கும்
போது கடவுள் எதிரே வந்தது
போல அடடா என் கண்
முன்னாடி அவளே வந்து
நின்றாளே குடை இல்லா
நேரம் பாா்த்து கொட்டி போகும்
மழையை போல அழகாலே
என்னை நனைத்து இது தான்
காதல் என்றாலே

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Devi Sri Prasad

Fans

»Kanmoodi Thirakumbothu« gefällt bisher niemandem.